Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் கைதான இராமேஸ்வர கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை


நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 07 கடற்தொழிலாளர்களுக்கும் 2 வருட சிறைத்தண்டனை விதித்து 06 வருடங்களுக்கு அதனை மன்று ஒத்திவைத்துள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 07 கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்து மறுநாள் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , கடற்தொழிலாளர்களை நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. 

அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, 07 கடற்தொழிலாளர்களும் மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , தம் மீதான குற்றச்சாட்டை கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 

அதனை அடுத்து அவர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை 06 வருடங்களுக்கு ஒத்திவைத்தார். 

No comments