யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர். இளைஞனிடம் இருந்து 40 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments