Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாநகர சபையினால் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த வியாபாரி


யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் அத்துமீறி கடையினை திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் குறித்த கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. 

யாழ் . மாநகர் பகுதியில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான சிற்றாங்காடி கடைத்தொகுதியில் , கடை ஒன்றில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , மாநகர சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மாநகர சபையினால் , அக்கடை சீல் வைத்து மூடப்பட்டது. 

அந்நிலையில் , குறித்த கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் , சீல் வைத்த கடையினை அத்துமீறி திறந்து , வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

இது தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநகர சபை வருமான வரி பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரை கடைக்கு அனுப்பி , கடைக்கு மறுபடியும் சீல் வைக்குமாறு முதல்வர் பணித்துள்ளார். 

அவர்கள் அங்கு சென்ற வேளை கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் , உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைக்காது முரண்பட்டமையால் , அது தொடர்பில் அறிந்து முதல்வர் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்து , பொலிசருடன் சம்பவ இடத்திற்கு சென்று , வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்தி கடைக்கு சீல் வைத்ததுடன் , கடையினை மாநகர சபையினர் மீள பாரமெடுப்பதாக அறிவித்தலையும் ஒட்டி சென்றுள்ளார். 

No comments