Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பிரமாண்டமாக உருவாகும் மில்லர்


ஈழத்தில் மிக பிரமாண்டமான முறையில் தயாராக இருக்கும் மில்லர் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஓன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈழ திரைப்படங்களை தயாரித்து வரும் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் , ஈழத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜ் சிவராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் பூவன் மதீசனின் இசையமைப்பில் மில்லர் படம் உருவாகவுள்ளது.

திரைப்பட ஆரம்ப நிகழ்வில், கவிப்பேரசு வைரமுத்து, இயக்குநர்களான பாண்டியராஜ், நித்திலன் , நடிகர்களும் இயக்குநர்களுமான ரஞ்சித், சிங்கம்புலி, தயாரிப்பாளரான P.L தேனப்பன் மற்றும் வசந்தபவன் தயாரிப்பாளர் ரவி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட விருந்தினர்களுடன், ஈழத்து கலைஞர்கள், ஈழ சினிமா ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் றீகன், நடிகை மிதுனா , ஒளிப்பதிவாளர் ஏ.கே கமல், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், படத்தொகுப்பாளர் அருண், ஒப்பனை கலைஞர் டேறியன், கலை இயக்குநர் கோபி , ஆடை வடிவமைப்பாளர் V.S சிந்து, , இசைக்கலவை சாய்தர்சன்  உள்ளிட்டவர்களுடன் ஈழ கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

ஈழத்தின் பின்னணிகளை, கதைக்களமாக கொண்டு புத்தி கெட்ட மனிதர்கள் , டக் டிக் டொஸ், தீப்பந்தம் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ராஜ் சிவராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள மில்லர் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments