தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ (வயது 59) எனும் மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் , அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பேருந்தின் சாரதியை கைது செய்த ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சாரதியை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments