யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகஸ்தரான கந்தசாமி தர்சன் (வயது-48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை சித்தன்கேணி வீதியில் கடந்த முதலாம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments