Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியா பல்கலை மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு


வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

மாணவன் , சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், மாணவரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது. 

அதனை அடுத்து, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments