கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகனம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் உடைவு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை உடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.








No comments