சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த யாத்திரையானது, எதிர்வரும் சித்திரை மாதம் வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்குகொண்டு செல்லும் பவனி, நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு, ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதிண்ண நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் , சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைகள் கடும் சேதமைடைந்திருந்த நிலையில் , துரித கெதியில் அவை சீரமைக்கப்பட்டுள்ளது.






No comments