யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி முதலாம் திகதியான இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறித்த அறிவிப்பை மீறி செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்திருந்தார்.
லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய காகிதம் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.




.jpg)


No comments