Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்த 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஒரு படகில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட 11 பேரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர் , படகினை மீன் பிடி துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட 11 கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதேவேளை புத்தாண்டு தினமான நேற்றைய தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்தமையால் , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments