குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் மெதகம பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments