Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் 3 மாதங்களாக ஆசிரியரை காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்


வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் காணாமல் போனது முதல் இன்று வரை அவரது தொலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.  

இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது இவரை எங்கேனும் கண்டால், 0777444117 மற்றும் 0772011106 ஆகிய தொலைபேசி எண்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments