Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை.


6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கூட்டமைப்பு, 

6 வருடங்களாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக, அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேசியப் பொருளாதாரம், வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, தமது பொறுப்புகளைத் தவறிய அதிகாரிகளே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments