Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் படுகொலை


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின்னட மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார்.

அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் விரிவுரையாளரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments