யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
யாழ்.மத்திய பேருந்து வளாகத்தினுள் பொது மலசல கூடம் அமைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டு , அதற்கு அமைவாக அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு , பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மலசல கூட்டத்திற்கான நீர் குழாய்களை பொருத்தும் பணிகளுக்காக மாநகர சபை ஊழியர்கள் சென்ற வேளை , மலசல கூடம் தமது கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு மாநகர சபை குழாய்களை பொருத்த முடியாது என இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்
அத்துடன் மாநகர சபை பொது மலசல கூடத்தை நிர்வகித்தால் , அதற்கு எதிராக நாம் எமது போக்குவரத்து சேவையை முடக்கி போராடுவோம் என எச்சரித்துள்ளனர்
கட்டுமானம் நடைபெறும் போதே , மலசல கூடத்தை மாநகர சபை தான் நிர்வாகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் , அதற்கு எதிர்ப்புக்களோ , அது தொடர்பில் பேச்சுக்களையோ போக்குவரத்து சபையினர் நடத்தவில்லை.
இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் , எமது வளாகத்தினுள் கட்டப்பட்டுள்ள மலசல கூடம் எமக்கே சொந்தம். அதனை நாமே நிர்வாகிப்போம் என கூறி பணிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.
தொடர்ந்து இடையூறு விளைவித்தால் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என மாநகர சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.







No comments