Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா


சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.

அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அனுசாசணையின் பேரில் “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 59 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த சம்பிரதாய நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டதுடன் "நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் - விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்" என்று பிரார்த்தித்து, விவசாயத்தின் மூலம் நாடு தன்னிறைவு பெற்று, வளமான பொருளாதாரம் உருவாக வேண்டும் என நாடு மற்றும் தேசத்திற்காக ஆசி வழங்குவதும் பாரம்பரிய முறைப்படி இங்கு இடம்பெற்றது

தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது

அத்துடன், ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

59 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது










No comments