Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள் - பொலிஸார் விசாரணை


அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. 

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அல்ஃபினோ அருள்பாய்ஸ் (வயது 17) எனும் சிறுவன் உயிரிழந்திருந்தான். 

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் , தமக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் தம்மை மோட்டார் சைக்கிள்களில் இனம் தெரியாத நபர்கள் பின் தொடர்பாகவும் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் தெரிவித்திருந்தனர். 

அதேவேளை கடந்த 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தம்மை அச்சுறுத்தும் வகையில் இருவர் பின் தொடர்ந்ததாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர் 

முறைப்பாட்டின் போது , தம்மை பின் தொடர்பவர்கள் குறித்த ஒளிப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டை அடுத்து, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்துள்ளார். 

அது தொடர்பிலான விசாரணைக்காக , முறைப்பாட்டாளரான உயிரிழந்த சிறுவனின் தாயாரை இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துள்ளார். 

அதேவேளை குற்றம் சாட்டப்படும் பொலிஸ் பிரிவினரே குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் வேறு பிராந்திய பொலிஸாரோ , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

அதேவேளை சிறுவன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றம் சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொள்வதற்கும் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரின் விசாரணைகளில் திருப்தி இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்ந்த மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து , துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments