Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புகையிரத விபத்துக்கு தண்டவாள ஆணிகளை கழட்டியமையே காரணம் ? - ஒருவர் கைது ; மற்றுமொருவருக்கு வலைவீச்சு


புகையிரதம் தடம் புரண்டு, பலர் காயமடையக் காரணமான தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாக ஒருவரை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர் 

குறித்த நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொல்கஹவெலையிலிருந்து இன்றைய தினம் சனிக்கிழமை புறப்பட்ட  ரயிலானது, தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது  வனவாஸல வனவாசல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு  இடையே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தண்டவாளத்தில் இருந்த ஆணிகள் கழற்றப்பட்டமையே விபத்து காரணம் என கண்டறிந்துள்ள நிலையில் , அது தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த அணி கழற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

No comments