யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியம் தீ பிடித்த நிலையில் அப்பகுதியில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேரில் வந்து சோதனையிடவுள்ள நிலையில் , குறித்த பகுதி குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














No comments