Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை


பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்தார். 

அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூஸ் இருமொழிப் பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மூடப்பட்டிருக்கும் என குறிப்பிட்டார். 

மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் இந்தக் காய்ச்சல் நிலைமை காரணமாக, கடந்த 7 ஆம் திகதி முதல் குறித்த பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

No comments