கொழும்பு மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 27 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு, 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் தொடர்பானது.









No comments