Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தவறான நிதிப் பரிமாற்றங்களினால் நாடு கறுப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டலாம்


நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியபோது, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது:-

"பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு பல விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்துக்கு நேரடியாகச் செல்வாக்குச் செலுத்தும் துறைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாறிவரும் உலக நடப்புக்கு அமைய, நிதி சார்ந்த சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. குறிப்பாக, இலத்திரனியல் முறைமை ஊடான திருட்டுக்கள் மற்றும் தாக்குதல்கள் உலகளாவிய மட்டத்தில் தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய நவீன சவால்களை வெற்றிக்கொள்வதற்குப் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். 

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம், பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் என்பன கொண்டு வரப்பட்டுள்ளன

தவறான நிதிப் பரிமாற்றங்களினால் நாடு கறுப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டால், அது பொருளாதாரத்துக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, எதிர்கால சவால்களை வெற்றிக்கொள்வதற்காகவே இவ்வாறான திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

No comments