வடக்கில் மிக பிரமாண்டமான முறையில் முதல் முதலாக மகளிருக்கான உள்ளக மைதான துடுப்பாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன
திறந்த போட்டியாக நடைபெறவுள்ள துடுப்பாட்ட போட்டியில், பாடசாலை அணிகள் , விளையாட்டுக்கழகங்கள் , தனியார் நிறுவனங்கள் , தனியார் கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள முடியும் என ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்
போட்டிகள் அனைத்தும் ஐந்து பரிமாற்றங்களை கொண்ட , 7 பேர் பங்குபற்றும் போட்டிகளாக நடைபெறவுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதியான பண பரிசில்கள் வழங்கப்படும் எனவும் , போட்டியில் சாதிக்கும் வீராங்கனைகளுக்கும் பரிசில்கள் , கிண்ணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு , 077 192 7081 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்









No comments