நாட்டில் மேலும் 22 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை பிசிஆர் பிரசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இன்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்பதுடன் 5 பேர் கட்டாரிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 804 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2 ஆயிரத்து 121 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments