Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீனவர்களின் பிரச்சினைகளை ஆராய டக்ளஸ் தலைமையில் கூட்டம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு


பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறும் வடமராட்சி மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயம் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதேச செயலாளரால் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் ஈபிடிபி கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் தொடர்பில் அறிந்துகொண்ட தேர்தல் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசம் வடமராட்சி கடற்தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பொலிஸாரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட மீனவர்கள் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments