Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி: 5 வயது குழந்தை உயிரிழப்பு


குருநாகல் – கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டிக்கு முன்பாக நாய் ஒன்று வீதியில் பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி தனியார் பேருந்து ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments