Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தவறி விழுந்தேன்' , இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்



சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் தவறி விழுந்ததாக சுன்னாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். 

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி  உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன் சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் , சுன்னாக பொலிஸார் வைத்திய சாலைக்கு சென்று இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்ற போது , தான் தவறி விழுந்தே காயங்களுக்கு உள்ளானேன் என வாக்கு மூலம் அளித்ததுடன் , தனக்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

No comments