Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள்!



யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்துகள் சுமார் 5 கிலோ கிராம் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்துகள் கண்டறிப்பட்டது.

அது தொடர்பில்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பதையடுத்து , நீதிமன்ற உத்தரவில் சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிமருந்து அடங்கிய பொதி மீட்கப்பட்டது.

அதனுள்  3 கிலோ 750 மில்லிக்கிராம் சி4 மற்றும் ரிஎன்ரி வெடிமருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments