மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் கொரோனா சடலங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் நேற்றைதினம் (திங்கட்கிழமை) மேலும் 7 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
No comments