Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கினியாவில் வெடிப்பு சம்பவங்களினால் 20பேர் உயிரிழப்பு- 600க்கும் மேற்பட்டோர் காயம்!



எக்குவடோரியல் கினியாவில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களினால், 20பேர் உயிரிழந்துள்ளதோடு 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை துறைமுக நகரமான பாட்டாவில், மொன்டோங் நுவாண்டோமாவின் அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக கினியா ஜனாதிபதி டியோடோரா ஓபியாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த இராணுவ முகாமில் டைனமைட்டை அலட்சியமாக கையாண்டதால் இந்த வெடிப்பு வெடிப்பு ஏற்பட்டது. பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு வி.யங்களை கவனத்தில் கொள்ளவில்லை. வெடிப்பின் தாக்கம் பாட்டாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கட்டடங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டா நகரில் ஏற்பட்ட வெடிப்புகள் காற்றில் புகையை அனுப்பி பல கட்டிடங்களை அழித்ததற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. மேலும் வெடிப்புகளுக்கான காரணம் முழுமையாக ஆராயப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, சுகாதார அமைச்சகம் 17பேர் உயிரிழந்ததாகவும், ஜனாதிபதியின் அறிக்கையில் 15பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேமரூனுக்கு தெற்கே அமைந்துள்ள 1.3 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மேற்கு ஆபிரிக்க நாடான எக்குவடோரியல் கினியா, 1968 இல் சுதந்திரம் பெறும் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது

No comments