கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5.45 மணியளவில், வெள்ளவத்தை கரையோர மார்க்கத்தில் பயணித்த காரொன்று பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காரின் சாரதி, மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காரின் சாரதியை கைது செய்த வெள்ளவத்தை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments