Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் விபத்து - பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!



கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிகண்டியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பரந்தன் இடையே வயல்வெளிப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேரி ஜாக்சன் அன்ரனி (வயது -30) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த போது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments