Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன



உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் மும்லையிலுள்ள சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியானது, மும்பையில் இருந்து விமானம் ஊடாக டுபாயிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து  இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, தடுப்பூசியினை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த தடுப்பூசிகளை, விமான நிலையத்திலுள்ள குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை, நாளை முதல் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

No comments