அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசஸ்டன் போராடி வரும் நிலையில் , அதன் தெற்கு மாகாணமான அலபாமாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன். சாலைகளில் மின்கம்பங்கள் சரிந் து விழுந்துள்ளன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும்்தெரிவிக்கப் படுகின்றது.
அத்துடன் சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாகாண கவர்னர் கே இவே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புயலில் சிக்கி 100-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் , இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள தாக அமெரிக்க ஊடவங்கள் தெரிவிக்கின்றன.
No comments