Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மகிந்தவைத் தோற்கடித்த தவறை மீண்டும் செய்யவேண்டாம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்ததன் மூலம் செய்யப்பட்ட தவறை மீண்டும் மீண்டும் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று கிராமத்துடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் இறையாண்மையைக் காட்டிக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று ஜனாதிபதி கூறினார்.

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் மூலம் அச்சமின்றி எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம்.

நாம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் முந்தைய அரசின் தவறுகளால்தான் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அரசுக்கு எதிரான தவறுகளை சமூகமயமாக்கும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments