யாழ்வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் வைபவ ரீதியாக அஞ்சல்துறை அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலக திறப்பு நிகழ்வானது வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகம், தபால்த்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments