பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19)வெள்ளிக்கிழமை பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று , பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் இரண்டு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், வெளிவிவார அமைச்சர், பங்களாதேஷ் வங்கி ஆளுநர் ஆகியோரை சந்திந்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும், இன்று பிற்பகல் பிரதமர் விசேட உரையாற்றவுள்ளதாகவும் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments