Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குழந்தையை பயமுறுத்தி உணவூட்ட 119 க்கு அழைப்பு


பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு நாளொன்றுக்கு 1,800க்கு மேற்பட்ட அழைப்புகள்  வருவதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவாத்தார்.  இவற்றில் பல விநோத அழைப்புகளும் வருகின்றன .

இதற்கமைய, தமது குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறியும் 119க்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான அழைப்புகளை முன்னெடுக்காமல். அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

No comments