கொழும்பில் சில பகுதிகளுக்களில் நாளை (21) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை அதாவது 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01,03,09,14 மற்றும் கடுவெல பகுதிகளில் குறித்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
மேலும், கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
No comments