Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊடக மாஃபியாக்களுக்கு பாடம் கற்பிப்பேன்!

எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

நுவரெலியா – வலப்பனையில் ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுற்றாடலை நேசிக்கிறேன். ஒருபோதும்  அதனை அழிக்க விரும்பியதில்லை. யுத்தத்தின் பின்னர் கொழும்பில் குப்பைகள் குவிந்திருந்தன. அவற்றை மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த போது, கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளை  செழிப்பாக்கினேன்.

மரங்களை நட்டு, பூங்காக்களை உருவாக்கி, ஈர வலயங்களை பாதுகாத்து, வௌ்ள அபாயத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தேன். அன்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் குப்பை மேடு காணப்பட்டது. இன்று அது ஒரு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறெல்லாம் சுற்றாடலைப் பாதுகாத்த என்னை இன்று பலரும் தூற்றுகின்றனர்.

அனைத்து கிராமங்களுக்கும் வீதிகள் அவசியம். வீதிகளை அமைத்துக் கொடுக்காவிடின் அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள்? இதன் காரணமாக நாம் காடுகளை அழிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.என தெரிவித்தார்.

ஊடகங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர். என தெரிவித்தார். 

No comments