Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரியங்கா பெர்னாண்டோ குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பு!



லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவின் தண்டனையை பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ 2019 டிசெம்பர் 6 அன்று மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். அதன் விசாரணையின் நிறைவில் பிரிட்டன் மேல் நீதிமன்றம் தண்டனையை ரத்துச் செய்ததாக லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

2018 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, ​லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பேன் என அச்சுறுத்தல் விடுத்ததாக மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுஇந்நிலையில், நேற்று பிரிட்டன் மேல் நீதிமன்றத்தின் மேன்முறையீட்டைத் தொடர்ந்து, பிரியங்கா பெர்னாண்டோ அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

No comments