Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொடிகாம சந்தை தொடர்புடைய நால்வர் உள்ளிட்ட 14பேருக்கு கொரோனா!

 


யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 760 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐந்து பேருக்கும், (நால்வர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். மற்றையவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிலும் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரிய பயிற்சியாளர்)

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும் (நால்வரில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகளும் இருவர் கொடிகாமம் வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்)

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கும் , சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் , தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கும் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஒருவருக்கும் என யாழில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அதேவேளை வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

No comments