நாடளாவிய ரீதியிலான அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் மூட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக முன்னதாக கடந்த 27 ஆம் திகதி , 30ஆம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த வாரமும் பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலை அடுத்தே மீள பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments