இன்று (01) நள்ளிரவு 12 மணி முதல் மே 17ஆம் திகதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
தவறான தகவல்களை உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments