வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருள்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய்க்கு தாக்கி தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றில் சரணடைந்து அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com
சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். www.tamilnews1.com
பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். www.tamilnews1.com









No comments