இந்தியாவில் மோசமடைந்துவரும் கோவிட்-19 நோய்த்தொற்று நிலமை காரணமாக வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தற்போதைய கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்திய நாட்டினர் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு வருகை தரும் போக்கு இருப்பதால், வடக்கு கடற்பரப்பில் இந்திய எல்லையை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது என்று கடற்படைப் பேச்சாளர், கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
அதன்படி வடக்கு கடற்பரப்பில் ரோந்து மற்றும் கடற்கரைகளில் கால் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும் பல இந்தியர்கள் படகுகள் மூலம் நாட்டிற்குள் நுழைந்ததாக சமீபத்திய நாள்களில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. என்றும் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்
No comments