வெளிநாட்டு தயாரிப்பான பேனா துப்பாக்கி மற்றும் நாலு வலம்புரி சங்குகளுடன் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கல விமான படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு பேனை துப்பாக்கி மற்றும் நாலு வலம்புரி சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments