காலி கராப்பிடிய போதனா வைத்திய சாலையின் கொரோனா நோயாளர்களுக்கான 36ஆம் இலக்க விடுதி நோயாளர்களால் நிரம்பியுள்ளதாகவும் , அதனால் வைத்திய சாலையில் மேலும் இரண்டு விடுதிகளை கொரோனா நோயாளர்களுக்கான விடுதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலையின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கே.எச்.ஜி.ஜிவரதன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , www.tamilnews1.com
வைத்திய சாலையில் 36ஆம் இலக்க விடுதி கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு முதல் குறித்த விடுதியில் 55 கொரோனா தொற்று நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்டு வருகிறது. www.tamilnews1.com
அதற்கு மேலதிகமாக நோயாளர்களை குறித்த விடுதியில் அனுமதிக்க முடியாத நிலையில் தற்போது 46 மற்றும் 25ஆம் இலக்க விடுதிகளையும் கொரோனா நோயாளர்களுக்கான விடுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மேலதிகமாக அக்மிமன மெலிபன் வைத்திய சாலையையும் கொரோனா தொற்று நோயாளர்களுக்காக ஒடுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். www.tamilnews1.com
No comments