நாட்டில் பல பிரதேசங்களில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டஙகளுக்கு மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரரெலியா ,காலி, கேகாலை , களுத்துறை மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மணசரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, மண்சரிவு ஏற்படக்கூடும் என அடையாளங்காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் கூடுதலான கவனத்துடன் செயல்பட வேண்டுமென மேலும் தெரிவித்தள்ளது.









No comments